தேர்தல் பத்திரங்கள் விநியோகத்தை நிறுத்தக்கோரி ஸ்டேட் வங்கி முன்பு முற்றுகை போராட்டம்

தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் நிதி பெறுவது சட்ட விரோதம். தேர்தல் பத்திரங்கள் வினியோகிப்பதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும். வினியோகிக்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பணமாக மாற்றப்படாத பத்திரங்கள் உரிய நிறுவனங்களிடம் திருப்பி அளிக்கப்படவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
உச்ச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்து உத்தரவு பிறப்பித்த பிறகும் தேர்தல் பத்திரம் முறை கேடு செய்பவர்களை காப்பாற்றும் உள்நோக்கத்துடன் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகத்தை கண்டித்து கோவில்பட்டி ஸ்டேட் பாங்க் வங்கியின் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் க.தமிழரசன் தலைமையில் முற்றுகையிட்டு முதன்மை மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
போராட்டத்திற்கு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கே.கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், மருதம் மாரியப்பன், மகராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் மாணிக்கராஜ், ஐ. என் . டி. யு. சி. ராஜசேகரன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், வட்டார துணை தலைவர் அமர்நாத் பிரபாகர், பகத்சிங் ரத்ததான கழகம் காளிதாஸ், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், ஆவல்நத்தம் லட்சுமணன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஜெகநாதன், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
