தூத்துக்குடியில் இருந்து 2 ஊர்களுக்கு தொலைதூர பஸ்கள் ; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில்இருந்து கோயம்புத்தூர் மற்றும் திரேஸ்புரத்திலிருந்து பேராவூரணி ஆகிய 2 தொலைதூர பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்தில் பயணித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
