திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு நடைபெற்றது.
நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
மதிமுகவுக்கு எந்த தொகுதி என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் மதிமுக வேட்பாளர் பம்பரம் சில இடத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இந்த தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் மு க ஸ்டாலின் மற்றும் வைகோ கையெழுத்தை இட்டனர்.
இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டு அக்கட்சிக்கு கடலூர் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சொந்த சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
விடுதலை சிறுத்தைகள் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் கையெழுத்திட்டனர்.
திமுக கூட்டணியில் இனிமேல் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு மட்டும் தொகுதியில் செய்யப்பட உள்ளன.
