மகளிர் தினவிழா : கஷ்டப்பட்டு வளர்த்த தாயாருக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் ஆட்டுத்தொட்டி பகுதியில் அதிமுக மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் பி. ஜெயக்குமாரி விசு ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பகுதி செயலாளர்கள் ஏடி அரசு, வி எம் மகேஷ், திரு வி க நகர் வடக்கு பகுதி செயலாளர் முகுந்தன் கோபால், திரு வி க நகர் மேற்கு பகுதி செயலாளர் பரமகுரு மற்றும் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசுகையில் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தாயாருக்கு புகழாரம் சூட்டினார். அவர் பேசியதாவது :-
என் தந்தை கவுன்சிலராக நேர்மையாக பணியாற்றினார். இதனால் சம்பாத்தியம் குறைவாக இருந்தது மக்கள் பணியில் மும்முரம் காட்டியதால் எனது தாய் காலை 7 மணிக்கு கிளம்பி மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, ஆகிய பகுதிகளில் சென்று அரிசி வாங்கி வந்து காசிமேடு பகுதியில் விற்பனை செய்வார்.
அதைத்தொடர்ந்து புள்ளம்பாடி சென்று புடவைகள் வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்தார். மேலும் 1968 ஆம் ஆண்டு 25 ஆயிரம் ரூபாய் சீட்டு பிடித்தார்.இந்நிலையில் என்னை டான் போஸ்கோ பள்ளியில் ஒரு சவரன் 120 ரூபாய் இதுபோல் 4 மாதத்திற்கு 4 சவரன் தொகை அளவுக்கு எனக்கு பள்ளிக்கு பீஸ் கட்டி படிக்க வைத்தார்
இதனால் இன்று நான் அமைச்சராக வந்து பொதுமக்களுக்கு நன்மை செய்து வருகிறேன் இதற்கு எல்லாம் எனது தாயாரின் வளர்ப்பு தான் காரணம்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் பேசினார். மேலும் அனைத்து பெண்களுக்கும் பூங்கொத்து கொடுத்தார். முன்னதாக ஜெயக்குமாரை பெண்கள் ஆர்வாரத்துடன் வரவேற்றனர்.
