கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் ; பக்தர்கள் விடிய விடிய தரிசனம்

மகா சிவராத்திரி முன்னிட்டு நேற்று இரவு சிவன் கோவில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. அதன்படி கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோவிலில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்க இரவு 7 மணியிலிருந்தே கோவிலுக்கு பக்கத்தில் வரத் தொடங்கினர். 8 மணி அளவில் கோவில் நிரம்பி விட்டது.
இரவு 9 மணிக்கு முதல் கால பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது.
நான்கு கால பூஜைகளிலும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. மூன்றாம் கால பபூஜையின் போது லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நான்காம் கால பூஜையின் போது நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

ஒவ்வொரு கால பூஜைகள் முடிவிலும் பக்தர்களுக்கு உபயதாரர்கள் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் கோவிலில் விடிய விடிய இருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு கால பூஜை இடைவெளியிலும் பக்தர்கள் கோவிலி ல் அமர்ந்தபடி தூங்கியதை காண முடிந்தது. தூக்கம் வராமல் இருப்பதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தி நிகழ்ச்சிகள் நடத்தினால் தூக்கம் கலைந்து உற்சாகம் ஏற்படும் என்று பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.
