Month: February 2024

தூத்துக்குடி

தடைகளை தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவோம்; தூத்துக்குடி விழாவில் பிரதமர் மோடி பேச்சு

2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி இன்று காலை மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தார். துறைமுக ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது. அங்கு மத்திய இணைமந்திரி முருகன் பிரதமரை நேரில் வரவேற்றார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் விழா நடந்த இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி விழாவில் பங்கேற்றார்.ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் ; காங்கிரசார் கைது

தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று நடக்கும் விழாவில்  பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 17,300 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார், இதையொட்டி தூத்துக்குடியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,. இந்நிலையில் தூத்துக்குடி கடற்கரை சாலையில் துறைமுக சேர்மன் குடியிருப்பு முன்பு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு இலங்கை அரசால் பிடித்து சிறை வைக்கப்பட்டுள்ள […]

ஆன்மிகம்

மாசி மாத சங்கடஹர சதுர்த்தி: மஞ்சள்கயிற்றை மாற்றி சுமங்கலி வரம் பெறுங்கள்

28-02-2024 மகிமை நிறைந்த மாசி சங்கடஹர சதுர்த்தி விரதம்.. நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதிலும், ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். *சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி ஆகும். பவுர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதியே மாத […]

கோவில்பட்டி

சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் குதிரையுடன் முழு உருவ வெண்கல சிலை திறப்பு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கவர்னகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கல சிலையை  முதலமைச்சர்  மு க.ஸ்டாலின்* காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கல சிலையை  அமைச்சர் கீதா ஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ வி.மார்க்கண்டேயன் ஆகியோர் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். […]

செய்திகள்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை; நிகழ்ச்சிகள் முழு விவரம்

பிரதமர் மோடி 27 மற்றும் 28 ஆம் தேதிக்கான தமிழக சுற்றுபயணம் இன்று தொடங்கியது. மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையம் வருகை தந்தார். விமான நிலையத்தில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர் மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்றார். மதியம் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி, நாளை அடிக்கல் நாட்டுகிறார்

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தூத்துக்குடியில் நாளை (28.2.2024) காலை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறுஉள்கட்டமைப்புத் திட்டங்கள், இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். முழுமையாக […]

செய்திகள்

சென்னையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் பல்வேறு தரப்பினர் பரிந்துரைகள் வழங்கினர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களுடன் இன்று (27/02/2024) திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனை நடத்தினர். திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி, திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 100 பேருக்கு இலவச ஹெல்மெட் ; நடிகர் பிரசாந்த் வழங்கினார்

நடிகர் பிரசாந்த்  ரசிகர் மன்றம்  சார்பில் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் கோவில்பட்டி  மெயின் ரோட்டில் உள்ள ஞானமலர் பெட்ரோல் பங்க்கில் நேற்று பொதுமக்கள் 100  பேருக்கு இலவசமாக நடிகர் பிரசாந்த் , ஹெல்மெட்டுகளை வழங்கினார்” நிகழச்சியில் பிரசாந்த் பேசுகையில், பொதுமக்கள் இரு சக்கர வாகனங்கள் .ஓட்டும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றம் சார்பில் ஹெல்மெட் இலவசமாக வழங்கி வருகிறோம் . சாலை விதிகளை […]

கோவில்பட்டி

பள்ளி குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி

தமிழ்நாடு  சிறார் எழுத்தாளர்கள்  கலைஞர்கள் சங்கம் கோவில்பட்டி கிளையின் சார்பில் பள்ளிக் குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி  கி.ரா. மணிமண்டப வளாகத்தில் நடைபெற்றது. கிளைச் செயலர் பிரபு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிறுகதை  எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி  கலந்து கொண்டார். மேனாள் வேளாண்-அறிவியல்கல்வி தொழிற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி மாணவி மதுஸ்ரீ, மஞ்சுஸ்ரீ, மாணவர் கலைச்செல்வம், இலக்குமி  ஆலை துவக்கப்பள்ளி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் தெரிந்தவர்களை  பணியமர்த்த கோரி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில்  பயணச்சீட்டு கொடுக்கும் அறையில் தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கோவில்பட்டி ரெயில்  நிலையத்திற்கு வந்த மதுரை கோட்ட முதன்மை பொறியாளர் கார்த்திக்கை கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து மனு கொடுத்தனர்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, நாம் தமிழர் கட்சி ரவிகுமார், கூட்டமைப்பின் பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.,யு,.சி, ராஜசேகரன், வழக்கறிஞர் முத்துக்குமார் […]