• May 20, 2024

கோவில்பட்டியில் 100 பேருக்கு இலவச ஹெல்மெட் ; நடிகர் பிரசாந்த் வழங்கினார்

 கோவில்பட்டியில் 100 பேருக்கு இலவச ஹெல்மெட் ; நடிகர் பிரசாந்த் வழங்கினார்

நடிகர் பிரசாந்த்  ரசிகர் மன்றம்  சார்பில் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் கோவில்பட்டி  மெயின் ரோட்டில் உள்ள ஞானமலர் பெட்ரோல் பங்க்கில் நேற்று பொதுமக்கள் 100  பேருக்கு இலவசமாக நடிகர் பிரசாந்த் , ஹெல்மெட்டுகளை வழங்கினார்”

நிகழச்சியில் பிரசாந்த் பேசுகையில், பொதுமக்கள் இரு சக்கர வாகனங்கள் .ஓட்டும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றம் சார்பில் ஹெல்மெட் இலவசமாக வழங்கி வருகிறோம் . சாலை விதிகளை பொதுமக்கள் மதித்து விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் “ என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரசாந்த் ரசிகர் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் அமலதாஸ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் , கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வணசுந்தர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

பிரசாந்த் கோவில்பட்டி வருகையை அறிந்து அவரது ரசிகர்கள் அதிகம் பேர் திரண்டு இருந்தனர். திருநெல்வேலி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கோவில்பட்டி வந்த பிரசாந்த், பின்னர் மதுரை சென்று விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *