மேட்டுப்பாளையம் கலை கல்லூரி கணித மன்றம் நிறைவு விழா
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24 கல்வி ஆண்டுக்கான கணித மன்றம் நிறைவு விழா இன்று( 26.2.2024) நடைபெற்றது. இவ்விழாவினில் கணிதத்துறை தலைவர் முனைவர் தி.பபிதா அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஸ்ரீகானப்பிரியா தலைமை உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை உதவி பேராசிரியர் முனைவர் எஸ் சந்தோஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு Ethics of Artificial Intelligence and Neural Network என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மாணவர்களுக்கு. .கணித மன்றத்தின் சார்பில் துறைகளுக்கிடையேயான Math Rangoli, Brain Teaser, Numerical Ninjas, Drawing, Photography ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவினை கணிதத்துறை மாணவர்கள் தொகுத்து வழங்கினர். கணிதத்துறை பேராசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.16hSee translation