• May 20, 2024

சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் குதிரையுடன் முழு உருவ வெண்கல சிலை திறப்பு

 சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் குதிரையுடன் முழு உருவ வெண்கல சிலை திறப்பு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கவர்னகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கல சிலையை  முதலமைச்சர்  மு க.ஸ்டாலின்* காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கல சிலையை  அமைச்சர் கீதா ஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ வி.மார்க்கண்டேயன் ஆகியோர் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெயக்கொடி,.இளையராஜா .பீக்கிலிபட்டி முருகேசன்

கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜானி கிறிஸ்டி பாய் வட்டாட்சியர்கள் சுரேஷ், செல்வகுமார்

தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி,

மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு 

மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன் பாண்டி ரவி

வழக்கறிஞர்கள் திங்குமார், ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *