தூத்துக்குடியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் ; காங்கிரசார் கைது
தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 17,300 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார், இதையொட்டி தூத்துக்குடியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,.
இந்நிலையில் தூத்துக்குடி கடற்கரை சாலையில் துறைமுக சேர்மன் குடியிருப்பு முன்பு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு இலங்கை அரசால் பிடித்து சிறை வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் இலங்கை சிறையில் பல மாதங்களாக வாடும் 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் வெளியுறவுதுறை அமைச்சகத்தை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.