• June 7, 2025

Month: November 2023

செய்திகள்

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா 102 வயதில் மரணம்; கோவில்பட்டியில் பிறந்தவர்  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 102 உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் சென்னை குரோம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், ,முக்கிய பிரமுகர்கள் , பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மதியம்  தி.நகர் கட்சி அலுவலகத்தில் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர் இறுதி சடங்கு நடைபெறும். கோவில்பட்டியில் பிறந்தவர் சுதந்திரப் போராட்ட வீரரும் […]

செய்திகள்

மாலத்தீவில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்களை மீட்டு  அழைத்துவர அரசு நடவடிக்கை; டி.ஜெயக்குமார்

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 29 மாதங்களில் தொடர்ச்சியாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசாலும், மாலத்தீவு அரசாலும் சிறைபிடிக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது. இதுகுறித்து தனியார் டி. வி. க்கு அளித்த பேட்டியில் முன்னாள்  அமைச்சரும், அ. தி. மு.க. அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமார் கூறியதாவது :_ விடியா தூங்கு மூஞ்சி அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், மீனவர்களின் உடமைகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சேதப்படுத்தபட்டு […]

கோவில்பட்டி

சிறந்த பள்ளிக்கூடம்: மந்திதோப்பு செண்பகராஜன் நினைவு தொடக்கப் பள்ளிக்கு சுழற்கேடயம் பரிசு  

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள செண்பகராஜன் நினைவு தொடக்கப் பள்ளிகூடம், தூத்துக்குடி மாவட்டத்திற்கான சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் பெற்றுள்ளது சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா வில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் .இந்த விருதை வழங்கினார். பள்ளியை சிறந்த முறையில் நிர்வகித்து வருகின்ற நிறுவனர் சிவ கணேஷ் குமார், தலைவர் சவுந்தர்ராஜன் , பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் பவுன் மாரியப்பன். பள்ளி தாளாளர், செயலாளர் ஆர்.இ.பி.. ரமேஷ் மற்றும் பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் […]

தூத்துக்குடி

குழந்தை திருமணங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடியில் இன்று செய்தியாலர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- .குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை குறைக்க வேண்டும், அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும், குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம் உருவாக வேண்டும் என்தற்காக சமூக பாதுகாப்பு துறை, காவல் துறை இணைந்து குழந்தைகளுக்கு எதிரான போக்சா உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் வழக்குகளை விரைந்து முடித்திடமும் அதற்கு தீர்வு காண்பதற்கு  செயல்பட்டு வருகிறோம். குழந்தை திருமணங்கள் பெரும்பாலும் 1098 என்ற எண்ணுக்கு தகவல் கிடைத்தவுடன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி இந்திரா நகரில் மின்னொளி கபடி போட்டி; 2 நாட்கள் நடக்கிறது

கோவில்பட்டி  இந்திரா நகர் வெற்றி விநாயகர் கோவில் திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில்  மின்னொளி கபடி போட்டி நடத்தப்படுகிறது.வருகிற 25, மற்றும் 26-ந்தேதிகளில் மாலை 6 மணி முதல் போட்டிகள் நடைபெறும்.  போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான நுழைவு கட்டணம் ரூ. 601 . முதல் சுற்றில் ஆடிய வீரர்கள் மட்டுமே இறுதி சுற்றுவரை விளையாட அனுமதி உண்டு. நடுவரின் தீர்ப்பே இறுதியானது  அதுவே உறுதியானது. போட்டி தொடக்க நாளன்று காலையில் வரும் அணிக்கு […]

தூத்துக்குடி

குழந்தைகள் தினவிழா பேரணி; அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு

குழந்தைகள் தின விழாவை  முன்னிட்டு தூத்துக்குடியில் பேரணி நடைபெற்றது. மாநகராட்சி ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பி.கீதா ஜீவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும் பேரணியில் பங்கேற்று நடந்து சென்றார். அவருடன்  மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தைகள் நல அலுவலர் . ரூபன் கிஷோர் மற்றும் காமராஜ் கல்லூரியைச் சேர்ந்த குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகத் துறை மாணவர்கள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி கடற்கரை சாலையில் தம்பதியை மிரட்டி ரூ.25ஆயிரம் பறித்தவர் கைது

தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் 1ல் வசிப்பவர் செல்லப்பா (வயது 53). இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது மனைவி ஆவடியம்மாள் (45) என்பவருடன் தீபாவளி ஜவுளி எடுப்பதற்காக பைக்கில் கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2பேர், அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி  ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து செல்லப்பா […]

கோவில்பட்டி

மனநல காப்பகத்தில் 52 பேருக்கு தீபாவளி புத்தாடை

கோவில்பட்டி அருகே செமப்புதூர் ஆக்டிவ் மைண்ட்ஸ் மன நல காப்பகத்தில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி இன்று 10/11/2023 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.  காப்பகத்தில் தங்கி இருக்கும் மன நலம் பாதிக்க பட்ட மாற்றுத் திறனாளிகள் 52 நபர்களுக்கும் கசவன்குன்றைச் சேர்ந்த பி. வி. எம். சட்ட குழுமம் நிறுவனர் வழக்கறிஞர் பிரகாஷ் ஆகாஷ் பாண்டியன் புதிய உடைகள் இரண்டு செட் மற்றும் இனிப்புகள் வழங்கினார்      இந்த  நிகழ்வில் ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவன […]

கோவில்பட்டி

செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண கோலாகலம்  

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற  செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்டோபர்  29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவிலில் மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை , அலங்காரம் மற்றும் மாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான இன்று (வியாழக்கிழமை) துவாதசி திதியும் உத்திர நட்சத்திரம் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதனத்தில் இரவு 7 […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தில் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன செய்யலாம்?

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்க பாலம் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் இருந்து சாக்கடை ஊற்று வந்து கொண்டே இருக்கும். இதனால் சாக்கடை நீரும் மழை தண்ணீரும் சேர்ந்து சுகாதார கேடுகளை விளைவித்து வருகிறது. நேற்று பெய்த கனமழை காரணமாக அந்த பாலத்தில் தண்ணீர் தேங்கியது. அப்போது மதுரையில் இருந்து வந்த தனியார் பஸ், தண்ணீரை கடக்கும் போது பழுதடைந்து நின்று விட்டது. இதனால் பயணிகளை […]