• June 8, 2025

குழந்தைகள் தினவிழா பேரணி; அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு

 குழந்தைகள் தினவிழா பேரணி; அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு

குழந்தைகள் தின விழாவை  முன்னிட்டு தூத்துக்குடியில் பேரணி நடைபெற்றது. மாநகராட்சி ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணி தொடங்கியது.

பேரணியை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பி.கீதா ஜீவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும் பேரணியில் பங்கேற்று நடந்து சென்றார். அவருடன்  மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தைகள் நல அலுவலர் . ரூபன் கிஷோர் மற்றும் காமராஜ் கல்லூரியைச் சேர்ந்த குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகத் துறை மாணவர்கள் பலர் நடந்து சென்றனர்.

ராஜாஜி பூங்காவில் தொடங்கிய பேரணி, மாநகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *