தூத்துக்குடி கடற்கரை சாலையில் தம்பதியை மிரட்டி ரூ.25ஆயிரம் பறித்தவர் கைது

தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் 1ல் வசிப்பவர் செல்லப்பா (வயது 53). இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது மனைவி ஆவடியம்மாள் (45) என்பவருடன் தீபாவளி ஜவுளி எடுப்பதற்காக பைக்கில் கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2பேர், அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து செல்லப்பா தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஓட்டப்பிடாரம் சிலோன் காலினியை சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (33), என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 25,000-த்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் வந்த மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
