மனநல காப்பகத்தில் 52 பேருக்கு தீபாவளி புத்தாடை

கோவில்பட்டி அருகே செமப்புதூர் ஆக்டிவ் மைண்ட்ஸ் மன நல காப்பகத்தில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி இன்று 10/11/2023 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
காப்பகத்தில் தங்கி இருக்கும் மன நலம் பாதிக்க பட்ட மாற்றுத் திறனாளிகள் 52 நபர்களுக்கும் கசவன்குன்றைச் சேர்ந்த பி. வி. எம். சட்ட குழுமம் நிறுவனர் வழக்கறிஞர் பிரகாஷ் ஆகாஷ் பாண்டியன் புதிய உடைகள் இரண்டு செட் மற்றும் இனிப்புகள் வழங்கினார்
இந்த நிகழ்வில் ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவன தலைவர் தேன் ராஜா, காப்பக காப்பாளர் அய்யப்பசாமி, மேற்பார்வையாளர் மாடசாமி, மற்றும் மாரி செல்வம், கார்த்திக், முத்துப்பாண்டியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
