• June 8, 2025

செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண கோலாகலம்  

 செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண கோலாகலம்  

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற  செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்டோபர்  29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் கோவிலில் மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை , அலங்காரம் மற்றும் மாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

திருவிழாவின் நிறைவு நாளான இன்று (வியாழக்கிழமை) துவாதசி திதியும் உத்திர நட்சத்திரம் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதனத்தில் இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் ரிஷப லக்னத்தில்சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக  நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.

இரவு 9: மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்திலும் அம்பாள் பல்லாக்கிலும் பட்டணப்பிரவேசம் சென்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *