கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தில் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன செய்யலாம்? அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்க பாலம் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் இருந்து சாக்கடை ஊற்று வந்து கொண்டே இருக்கும். இதனால் சாக்கடை நீரும் மழை தண்ணீரும் சேர்ந்து சுகாதார கேடுகளை விளைவித்து வருகிறது.
நேற்று பெய்த கனமழை காரணமாக அந்த பாலத்தில் தண்ணீர் தேங்கியது. அப்போது மதுரையில் இருந்து வந்த தனியார் பஸ், தண்ணீரை கடக்கும் போது பழுதடைந்து நின்று விட்டது. இதனால் பயணிகளை தீயணைப்பு படையினர் மீட்டனர். ஜேசிபி மூலம் பஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த பாலத்தை எந்த வாகனமும் கடக்காமல் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று கோவில்பட்டி வந்தார். ரெயில்வே சுரங்க பாலம் பகுதிக்கு வந்து பார்வையிட்டார். அவருடன் ஆர்.டி.ஒ. ஜென் கிறிஸ்டி பாய், நகராட்சி தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலா, தாசில்தார் லெனின், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர், நபார்டு மற்றும் கிராமசாலைகள் கோட்ட பொறியாளர் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிர்நாடு வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் வந்தனர்.
சுரங்க பாலத்தை பார்வையிட்டு மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வின்போது சுரங்கப்பாதை, சாலைகள், பாம்பிங் நிலையம், நீரை வெளியேற்றும் மோட்டார் பம்புகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
ஆய்வு முடிந்தவுடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இதர துறை அலுவ்லகளுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
கூட்ட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு துறையினருக்கும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பனி மற்றும் கால நிர்ணயம் செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆட்சியர் கோ.லட்சுமிபதி பேசியதாவது:-
சுரங்க பாதையில் தேங்கும் மழைநீரின் அளவை கண்காணித்து தேங்கும் நீரின் அளவு அதிகாரி அதிகரிக்கும் பட்சத்தில் அதிக சக்தி கொண்ட மோட்டார்கள் மூலம் இடைவெளியின்றி நீரை வெளியேற்ற வேண்டும். சுரங்கப்பாதையில் தேங்கும் அதிக அளவு நீரை கண்டு உணர நெடுஞ்சாலை துறை, கொட்ட பொறியாளார் அபாயகரமான நீர்மட்ட அளவை குறியீடு செய்ய வேண்டும்.



மழைநீர் தேங்கினால் சுரங்கப்பாதையில் வேறு வாகனங்கள் நுழையாதவாறு காவல்துறையினர் இருபுறமும் தடுப்புகளை உடனடியாக அமைக்க வேண்டும். சுரங்க பாதையின் அருகே போக்குவரத்து காலலர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
நெடுஞ்சாலை துறையினர் மற்றும் கோவில்பட்டி நகராட்சியினர் சுரங்கப்பாதையில் அமைந்துள்ள மணலை அகற்ற வேண்டும். சுரங்கப்பாதையில் சரியான சரிவை அமைக்க வேண்டும்.
கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், கோவில்பட்டியில் உள்ள இதர மூன்று ரெயில்வே சுரங்க பாதையில் நீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் இத்தகைய இடர்களின் போது அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.
நெடுஞ்சாலை துறையினர் அணுகுசாலை விரிவாக்க பணிகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பாக ஆரமபித்து ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். சட்டரீதியான தடை ஏதுமின்றி பணிகள் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்யவேண்டும்.
கோவில்பட்டி காவல்துனை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருடன் இணைந்து வீடுகள் இன்றி தெருக்கள் மற்றும் பாலங்களின் அடியில் வாழும் நபர்களை அரசு உதவி பெறும் முதியோர் இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அனைத்து வட்டாட்சியர்களும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தங்கள் பகுதிகளுக்குள் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், சுரங்க பாதையில் அபாயகர அளவு குறியீட்டிற்கு மேல் மழைநீர் தேங்கும் போது எவ்வித வாகனங்களும் சுரங்க பாதையினுள் செல்லக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் .
இவ்வாறு ஆட்சியர் லட்சுமிபதி பேசினார்.
