கோவில்பட்டி இந்திரா நகரில் மின்னொளி கபடி போட்டி; 2 நாட்கள் நடக்கிறது

கோவில்பட்டி இந்திரா நகர் வெற்றி விநாயகர் கோவில் திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் மின்னொளி கபடி போட்டி நடத்தப்படுகிறது.வருகிற 25, மற்றும் 26-ந்தேதிகளில் மாலை 6 மணி முதல் போட்டிகள் நடைபெறும்.
போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான நுழைவு கட்டணம் ரூ. 601 . முதல் சுற்றில் ஆடிய வீரர்கள் மட்டுமே இறுதி சுற்றுவரை விளையாட அனுமதி உண்டு. நடுவரின் தீர்ப்பே இறுதியானது அதுவே உறுதியானது.
போட்டி தொடக்க நாளன்று காலையில் வரும் அணிக்கு நுழைவு கட்டணம் ரூ.801 பெறப்படும் விளையாட்டை மாற்றி அமைக்க விழா கமிட்டிக்கு முழு உரிமை உண்டு. எந்த ஒரு ஜாதி. மதம் குறிக்கும் பனியன் அணிந்து விளையாட அனுமதி இல்லை. விளையாட்டு வீரர்களுக்கு உணவு வழங்கப்படும்
போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு – ரூ.20,000 மற்றும் 7 அடி உயர கோப்பை இரண்டாம் பரிசு – 15,000 மற்றும் 6 அடி கோப்பை, மூன்றாம் பரிசு – ரூ. 10,000 மற்றும் 5 அடி கோப்பை நான்காம் பரிசு – ரூ. 8,000 மற்றும் 5 அடி கோப்பை, ஐந்தாம் பரிசு – ரூ.3,000 மற்றும் ஆறாம் பரிசு – ரூ. 3,000 மற்றும் வெற்றி கோப்பை ஏழாம் பரிசு – ரூ.3,000 மற்றும் வெற்றி கோப்பை, எட்டாம் பரிசு – ரூ.3,000 மற்றும் வெற்றி கோப்பை ஒன்பதாவது,பத்தாவது, பதினொன்றாவது, பன்னிரண்டாவது பரிசு தலா ரூ.2,000 மற்றும் வெற்றி கோப்பை பரிசாக வழங்கப்படும்.மேலும் சிறந்த ரைடர், சிறந்த பிடியாளர்க்கான பரிசுகளும் வழங்கப்படும்
மேலும் தகவல் அறிய 8760770259 , 7397587250 , 9789448956 , 7397649749 , 8680044524 என்ற அலைபேசி எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
