குழந்தை திருமணங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடியில் இன்று செய்தியாலர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
.குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை குறைக்க வேண்டும், அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும், குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம் உருவாக வேண்டும் என்தற்காக சமூக பாதுகாப்பு துறை, காவல் துறை இணைந்து குழந்தைகளுக்கு எதிரான போக்சா உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் வழக்குகளை விரைந்து முடித்திடமும் அதற்கு தீர்வு காண்பதற்கு செயல்பட்டு வருகிறோம்.
குழந்தை திருமணங்கள் பெரும்பாலும் 1098 என்ற எண்ணுக்கு தகவல் கிடைத்தவுடன் தடுத்து நிறுத்தப்படுகிறது. 18 வயது பூர்த்தியடையாத பெண்ணை அவர்களால் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்தாலும் அது குறித்து தகவல் கிடைத்ததும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வருகிறோம்,
இதனால் தமிழகத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையை விட, போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் இருக்க சமூக பாதுகாப்பு துறையின் மூலமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
