சிறந்த பள்ளிக்கூடம்: மந்திதோப்பு செண்பகராஜன் நினைவு தொடக்கப் பள்ளிக்கு சுழற்கேடயம் பரிசு

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள செண்பகராஜன் நினைவு தொடக்கப் பள்ளிகூடம், தூத்துக்குடி மாவட்டத்திற்கான சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் பெற்றுள்ளது சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா வில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் .இந்த விருதை வழங்கினார். பள்ளியை சிறந்த முறையில் நிர்வகித்து வருகின்ற நிறுவனர் சிவ கணேஷ் குமார், தலைவர் சவுந்தர்ராஜன் , பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் பவுன் மாரியப்பன். பள்ளி தாளாளர், செயலாளர் ஆர்.இ.பி.. ரமேஷ் மற்றும் பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழக ஆசிரியர் கூட்டணி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளது
