தூத்துக்குடியில் ரூ.57 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நாளை நடைபெறுவதையொட்டி இறுதி கட்டப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று பார்வையிட்டார். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:- தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் இருந்த போக்குவரத்து கழக பணிமனை ஆகிவற்றை அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. […]
கோவில்பட்டி பூவனநாத கோவிலுடன் இணைந்த பூதேவி நீளாதேவி உடனுறை சுந்தராஜ பெருமாள் கோவில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை யோட்டி இன்று அதிகாலை 4.30 மணி அளவி நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணி அளவில் சிறப்பு பூஜை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இரவு 8 மணி அளவில் சுவாமி சுந்தராஜ பெருமாள் வீதி உலா, கருட சேவை நடக்கிறது. இன்றைய கட்டளைதாரர் யோகீஸ்வரர் சமுதாயம்.
தமிழ்நாடு ஹதா யோகா அசோசியேசன், இந்தியன் ஹதா யோக் பெடரேஷன் சார்பில், ’3வது அகில இந்திய யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன் ஷிப் 2023’ போட்டி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி ஆடிட்டோரியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த போட்டியில் குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், சதீஸ்கர், கர்நாடகா, ஒரிஷா உள்ளிட்ட 15 மாநிலங்களிலில் இருந்து 250க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்துள்ளனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவு ஆண், பெண் என்று […]
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 125 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சவுபாக்கியா மஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்டதலைவர் விநாயகாரமேஷ், துணை ஆளுநர்முத்துச்செல்வம், சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம் அனைவரையும் வரவேற்றார் 125 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை மற்றும் சீதன பொருட்களான வளையல், […]
வேம்பார் தேவநேசம் இருதய அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளிகள் இடையேயான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சஞ்சய் ஸ்ரீ, ஜிந்தா கேசிங், கோபி கிருஷ்ணன் ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் உருவாக்கிய “நெடுஞ்சாலை மின்சார பாதுகாப்பு” என்ற அறிவியல் படிப்புக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான பரிசுத்தொகை ரூ. 3 ஆயிரம் மற்றும் கேடயத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி வழங்கினார். கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. […]
தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(வயது 27) . இவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் .முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் நேற்று (6.10.23) வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் இருந்தார்.. அவர் கல்லூரிக்கு செல்லாதது குறித்து சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மதியம் 2 மணி அளவில் ஹாஸ்டலுக்கு சென்று பார்த்தபோது சுகிர்தா இருந்த அறை பூட்டி […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பியை , ராவணனாக சித்தரித்து பிரதமர் மோடி பேசிய விவகாரத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க அலுவலகங்களை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி அறிவித்து இருந்தார். அதன் படி கோவில்பட்டியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் துாத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.,க அலுவலகம் நோக்கி காந்தி மண்டபத்திலிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக காங்கிரசார் சென்றனர். நகர தலைவர் அருண்பாண்டியன் […]
மத்திய அரசின் நவரத்தினா நிறுவனங்களுக்கு கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி விவரம்: பொறியாளர், மனிதவள மேம்பாட்டு அதிகாரி, அக்கவுண்ட்ஸ் அதிகாரி. இந்தப் பணியிடங்கள் Probationary பதவிகளுக்கானது. மொத்தப் பணியிடங்கள் – 232 பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.டெக். பி.எஸ். படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், கம்யூட்டர் சயின்ஸ் பொறியியல் […]
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று (7.10.2023) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டபந்தயம் நடைபெற்றது. 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 8 கி.மீ தூர ஓட்டப் பந்தயத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பி.கீதா ஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் […]
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மந்திதோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில் 31 – வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கே.சீனிவாசன் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவநை சந்தித்து மனு அளித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.அர்ச்சுணன். ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி […]