தூத்துக்குடி மருத்துவ மாணவி சாவுக்கு 3 பேராசிரியர்கள் காரணமா? திடுக்கிடும் தகவல்

தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(வயது 27) . இவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் .முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் நேற்று (6.10.23) வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் இருந்தார்.. அவர் கல்லூரிக்கு செல்லாதது குறித்து சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மதியம் 2 மணி அளவில் ஹாஸ்டலுக்கு சென்று பார்த்தபோது சுகிர்தா இருந்த அறை பூட்டி இருந்தது. இதையடுத்து குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர், மாணவி சுகிர்தா அறையை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுகிர்தா இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
.அறுவைச் சிகிச்சையின் போது தசைகளை தளர்வடைய செய்யும் மருந்தை தனக்குத் தானே ஊசி மூலம் செலுத்தி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் அவரது அறையில் தற்கொலைக்கு முன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “எனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம். அதில் ஒரு ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்; என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்,.
விசாரணைக்கு பிறகு மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மேலும் சுகிர்தா மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
