அறிவியல் கண்காட்சி: நாடார் மேல்நிலைப்பள்ளிக்கு 2-ம் பரிசு

வேம்பார் தேவநேசம் இருதய அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளிகள் இடையேயான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சஞ்சய் ஸ்ரீ, ஜிந்தா கேசிங், கோபி கிருஷ்ணன் ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் உருவாக்கிய “நெடுஞ்சாலை மின்சார பாதுகாப்பு” என்ற அறிவியல் படிப்புக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான பரிசுத்தொகை ரூ. 3 ஆயிரம் மற்றும் கேடயத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி வழங்கினார். கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பரிசு பெற்ற மாணவர்கள் , பயிற்சி அளித்த முதுகலை ஆசிரியர் முத்து கணேஷ் ஆகியோரை கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழ னிச்செல்வம், பள்ளி செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜான் கணேஷ் ஆகியோர் பாராட்டினார்கள்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சிவந்திபட்டி கிராமத்தில் ஒரு வாரம் நடைபெற்றது. முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜான் கணேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். மரக்கன்றுகள் நடப்பட்டன. சிவந்திபட்டி நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் :எண்ணம் போல் வாழ்க்கை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சேவை மாணவர்கள் கேசவன், ஹரிஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் முகாம் பற்றிய அனுபவங்களை கூறினார்கள்.
முகாமுக்கு வந்தவர்களை திட்ட அலுவலகர் கு.செல்வம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை பள்ளியின் ஆய்வக உதவியாளர் கண்ணன் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
