ஆண்களுக்கான 8 கி.மீ தூர ஓட்டப்பந்தயம்

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று (7.10.2023) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டபந்தயம் நடைபெற்றது. 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 8 கி.மீ தூர ஓட்டப் பந்தயத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பி.கீதா ஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் , மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். போட்ட்டியின் இறுதியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
