கோவில்பட்டியில் அகில இந்திய யோகாசன போட்டி; 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழ்நாடு ஹதா யோகா அசோசியேசன், இந்தியன் ஹதா யோக் பெடரேஷன் சார்பில், ’3வது அகில இந்திய யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன் ஷிப் 2023’ போட்டி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி ஆடிட்டோரியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த போட்டியில் குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், சதீஸ்கர், கர்நாடகா, ஒரிஷா உள்ளிட்ட 15 மாநிலங்களிலில் இருந்து 250க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்துள்ளனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவு ஆண், பெண் என்று தனித்தனிப் போட்டிகள் நடக்கிறது


.போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ எம்.எல்.ஏ.,தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘தென்மாவட்டத்தின் முக்கிய நகரம் கோவில்பட்டி. இங்கு கல்வி நிறுவனங்கள் அதிகம். விளையாட்டு வீரர்களும் அதிகமாக உருவாகி வருகிறார்கள். யோகாசனம் மனிதனின் மனதையும் உடலையும் ஒருங்கிணைக்கிறது. ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகா அவசியம். நல்ல சிந்தனையையும் கற்றுத் தருகிறது. செயலையும், சிந்தனையையும் ஒருமுகப்படுத்துகிறது. நோயின்றி வாழ யோகா தேவை’. என்றார்.
விழாவில், கொல்கத்தாவை சேர்ந்த இந்தியன் ஹதா யோக் பெடரேஷன் பொது செயலாளர் சரத்குமார் தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையா பாண்டியன், கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங், கல்லுாரி முதல்வர் காளிதாச முருகவேல், நேஷனல் ஹெர்பல் டிரக் கோ மேனேஜிங் டைரக்டர் வெங்கடேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் யோகா அசோசியேசன் தமிழ்நாடு பொது செயலாளர் மாரியப்பன் வரவேற்றார் அர்னால்டு ஜிம் பெனட் நன்றி கூறினார்.
