ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிவஞானபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி செல்வராதா (வயது 59). இவர் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 18-ந்தேதி அன்று பணிக்கு சென்று விட்டு தூத்துக்குடியில் இருந்து பஸ்சில் எப்போதும்வென்றானுக்கு வந்தார். அங்கு அவரை இளங்கோவன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். எப்போதும்வென்றான் ஏழு கண் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 […]
152-வது பிறந்தநாள்: ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு ஆட்சியர் மரியாதை
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாளினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழச்சி இன்று நடைபெற்றது. சிதம்பரனார் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கே.எஸ்.ராகவேந்திரா, எஸ்.பி.சிவலிங்கம், எம்.முத்துவேல் தமிழ்நாடு வ.உ.சி […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு விருதுநகர் மாவட்ட தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் ராமசாமி கொண்டார். கோவில்பட்டி ஒற்றுபட்ட திருநெல்வேலி மாவட்டமாக இருக்கும்போது கோவில்பட்டி துணை மாவட்டம் அந்தஸ்து பெற்று இருந்தது. கோவில்பட்டி இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் போக்குவரத்து தொடர்பில் உள்ள ஊர் ஆகும். கோவில்பட்டி வர்த்தகம், போக்குவரத்து, விவசாயம், தீப்பெட்டி ஆகிய […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது. திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம் நடை பெற்று தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் […]
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் விவசாய பெருமக்களிடையே சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று (4.9.2023) வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […]
நாடு முழுவதும் செப்டம்பர் 4ம் தேதி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகள் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்த்து அதன் மூலம் உயர் கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்தவர்கள். செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பேப்பர் பாய் தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்திதாள்களை இல்லங்களில் சேர்க்கும் காளிராஜ், ஜீவானந்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை […]
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாக ரீதியாக இருக்கின்ற 20 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு வறுமை கோட்டிற்கு கீழுள்ள 25 மணமக்களுக்கு அந்தந்த பகுதி திருக்கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தப்படும் என மானிய கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் திருமணம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் தூத்துக்குடி முத்தையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த […]
கமல்ஹாசனின் வெற்றிப்படங்களான ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘குணா’, ‘கலைஞன்’ என எல்லா படங்களிலும் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. 1989ல் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அவர் ஜனகராஜைப் பார்த்துப் பேசிய வசனமான ‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இன்றளவும் பல திரைப்படங்களில் இந்த வசனமும் இடம்பெற்றுள்ளது. ‘8 தோட்டாக்கள்’, ‘வனமகன்’, என இன்றும் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் ஆர்.எஸ். சிவாஜி, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாகவும் […]
கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன்பகுதியில் உள்ள ஸ்ரீ விக்ன விநாயகர் கோவில் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது. காலை 5.30மணிக்கு கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் தொடங்கி நடைபெற்றது.இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அதை தொடர்ந்து காலை 7.45 மணிக்குமேல் 8.45 மணிக்குள் விக்ன விநாயகருக்கு வருடாபிஷேகம், அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர்தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.கோவில்கோபுர […]
ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தாமரை, மல்லிகை, சூரியகாந்தி ,ரோஸ் என நான்கு அணிகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு லீக் முறையில் ஆக்கி போட்டி நடைபெற்றது. விறுவிறுப்புடன் நடந்த போட்டியில் சூரியகாந்தி அணியினர் முதலிடமும், மல்லிகை அணியினர் இரண்டாம் இடமும் பெற்றனர். இதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு […]