• May 20, 2024

தேசிய விளையாட்டு தினம்: கோவில்பட்டியில் ஆக்கி போட்டி

 தேசிய விளையாட்டு தினம்: கோவில்பட்டியில் ஆக்கி போட்டி

ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில்  கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தாமரை, மல்லிகை, சூரியகாந்தி ,ரோஸ் என நான்கு அணிகளாக வீரர்கள்  பிரிக்கப்பட்டு லீக் முறையில் ஆக்கி போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்புடன் நடந்த போட்டியில் சூரியகாந்தி அணியினர் முதலிடமும், மல்லிகை அணியினர் இரண்டாம் இடமும் பெற்றனர். இதை தொடர்ந்து நடந்த  பரிசளிப்பு விழாவுக்கு  ராஜீவ் காந்தி விளையாட்டு கழக தலைவர் காளிமுத்து பாண்டியராஜா தலைமை தாங்கினார். முத்துக்குமார், பிரசன்னா, உமா சங்கரி ஆகியோர் முன்னிலை வசித்தனர். வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பையும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இவற்றை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குருசித்திர சண்முக பாரதி வழங்கி கவுரவித்தார். நடுவர்களாக பிரியா அஸ்வர்த்தா சந்தோஷ் முகுந்தன் செல்வமுகில் ஆகியோர் செயல்பட்டனர் தேசிய விளையாட்டு தின போட்டிக்கான ஏற்பாடுகளை  ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர்  வேல்முருகன் மோகன் மற்றும் உறுப்பினர்கள் முகேஷ் குமார் ஜெகதீஸ்வரன் பிரேம்குமார் கவியரசன் அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்

முன்னதாக ஆக்கியின் தந்தை மேஜர் தயான் சந்த் உருவம் பொறித்த கேக் வெட்டப்பட்டு வீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *