அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் விக்ன விநாயகர் கோவில் வருடாபிஷேக விழா
கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன்
பகுதியில் உள்ள ஸ்ரீ விக்ன விநாயகர் கோவில் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது. காலை 5.30
மணிக்கு கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் தொடங்கி நடைபெற்றது.
இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அதை தொடர்ந்து காலை 7.45 மணிக்கு
மேல் 8.45 மணிக்குள் விக்ன விநாயகருக்கு வருடாபிஷேகம், அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர்
தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.கோவில்
கோபுர கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி புனித நீர் அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் பகல் 11 மணி அளவில் மதிய விருந்து
தொடங்கியது. கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் மதிய உணவு பரிமாறப்பட்டது. அந்த பகுதியினர் மதியம் 2 மணிவரை வந்து விருந்து சாப்பிட்டு சென்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்