• June 7, 2025

152-வது பிறந்தநாள்: ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

 152-வது பிறந்தநாள்: ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாளினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழச்சி இன்று நடைபெற்றது. சிதம்பரனார் சிலைக்கு மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கே.எஸ்.ராகவேந்திரா, எஸ்.பி.சிவலிங்கம், எம்.முத்துவேல் தமிழ்நாடு வ.உ.சி பேரவை தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ம்ற்றும் பெண்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று பின்னர், மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கல்மேடு சிவலிங்கம் செய்திருந்தார்.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் முழு உருவ சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதயசூரியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சைவ வேளாளர் சங்கத் தலைவர் டி.ஏ. தெய்வநாயகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் செயலாளர் மீனாட்சி நாதன், பொருளாளர் தளவாய், நிர்வாகிகள் சுப்பிரமணியன், கோமதிநாயகம், சிவராம கிருஷ்ணன் என்ற கிட்டு, கோமதி சங்கர், சொக்கலிங்கம், சக்திவேல், மகாராஜன் கந்தசாமி, கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கழக நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா அவர்களின் நல் ஆலோசனையின் படி

கோவில்பட்டியில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு கோவில்பட்டி ஒன்றிய அ.ம.மு.க.மாணவரணி செயலாளர் செண்பகராமன் தலைமையில் சின்னம்மா பேரவை பொறுப்பாளர் மாரியப்பன், நகர மாணவரணி செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் வ.உசி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *