• May 20, 2024

கோவில்பட்டியில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம்

 கோவில்பட்டியில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம்

நாடு முழுவதும் செப்டம்பர் 4ம் தேதி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகள் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்த்து அதன் மூலம் உயர் கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்தவர்கள்.

செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பேப்பர் பாய் தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  செய்திதாள்களை இல்லங்களில் சேர்க்கும் காளிராஜ், ஜீவானந்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை  பாராட்டி சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க செயலாளர் சரவணன், பப்ளிக் இமேஜ் தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்து செல்வம் கலந்துகொண்டு தினசரி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

இந்நிகழ்ச்சியில்  செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலமுருகன் நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *