• June 7, 2025

Month: September 2023

தூத்துக்குடி

12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்ககோரி தலையில் முக்காடு போட்டு போராட்டம்

இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள  12 பஞ்சாயத்துகளை விரைவில் கோவில்பட்டி முக்காடு போட்டு போராட்டம் யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்ட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தேசிய விவசாயிகள் மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.இளையரசனேந்தல் கிளை தலைவர் பாண்டியன் உட்பட ஏராமானோர் கலந்து கொண்டனர். இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களை 2008 ஆம் […]

சினிமா

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து திடீர் மரணம்

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை மரணம் அடைந்தார்.. அவருக்கு வயது 57. டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவிடம் 3 வருடங்கள் உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து. கட்டிட பொறியியல் படித்த மாரிமுத்து தமிழ் மீதும், கலை மீதும் இருந்த  ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் நுழைந்தார்.. […]

கோவில்பட்டி

நல்லாசிரியர் விருதுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்டி ஊர்வலம்

கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் குமார், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். இதையொட்டி அவருக்கு நேற்று கோவில்பட்டியில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வந்த தலைமை ஆசிரியர் சுரேஷ் குமாருக்கு  பள்ளி ஆசிரியர்கள்,  மாணவர்கள், என்சிசி, என்.எஸ்.எஸ். மாணவர்கள், பழைய மாணவர்கள், திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். மேலும் பேண்டு வாத்தியம் முழங்க, எட்டயபுரம் ரோடு கால்நடை மருத்துவமனை முன்பிருந்து அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு போட்டி; கனிமொழி தொடங்கி வைத்தார்  

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுப் போட்டி இன்று(8.9.23). தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. போட்டியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் செந்தில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்,. இந்த  போட்டிகளில் 16 -மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 130-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். வெற்றி பெறும் வீரர்கள் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச கடல் சாகச போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த கடல் சாகச […]

கோவில்பட்டி

காந்தி மைதானம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

.கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சேர்முகன் மனைவி சுப்புலட்சுமி(வயது 42). இவர் தனது பேரனுடன்  செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் காந்தி மைதானம் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றார். அப்போது  இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார். நகையை பறிகொடுத்த  சுப்புலட்சுமி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.விஸ்வகர்ம மகாஜன சங்க  துணை தலைவர் சண்முகவேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் தஙகள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சந்திராயன் 4, எரிமலை, காற்றாலை,  பசுமை வீடு,  3டி, சோலார், உள்ளிட்ட கண்காசிகள் இடம்பெற செய்திருந்தனர். அவற்றை பார்வையிட்ட அனைவரும் பாராட்டினார்கள். . நிகழ்ச்சியில் விஸ்வகர்ம உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேஸ்வரி, […]

கோவில்பட்டி

எழுத்தறிவு தினம் `லோகோ’ வடிவில் பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு

. உலக நாடு முழுவதும் செப்டம்பர் 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டிற்கான கருப்பொருள் நிலையான அமைதியான உலகத்தை உருவாக்குதல் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தின் அவசியத்தை எடுத்து கூறும் வகையில் அனைவரும் எழுதப் படிக்க வாருங்கள் என்று கூப்பிடுவதைப்போல் அறிவொளி இயக்க இலச்சினை (லோகோ) வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் […]

தூத்துக்குடி

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்; கனிமொழி வழங்கினார்

தாமிரபரணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் விளையும் வெற்றிலை அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. ஆத்தூர் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. மண், காற்றுவளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்கு காரணம். ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் 6 ஊராட்சிகளில் வெற்றிலை சாகுபடி பல தலைமுறைகளாக நடைபெறுகிறது. ஆத்தூர் வெற்றிலை தமிழகம் மட்டுமின்றி, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், டெல்லி, மும்பை, ஆக்ரா, பெங்களூரு, நெல்லூர், திருவனந்தபுரம் […]

கோவில்பட்டி

கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது

கோவில்பட்டி போலீஸ்  துணை கண்காணிப்பாளர்  வெங்கடேஷ் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது  அவர் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரண்குமார் (வயது 25) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து […]

தூத்துக்குடி

சிறு, குறு விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் வங்கி கடன்;

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ,தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கு அதிக பட்சம் ரூ.1 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள்/தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையான 50 விழுக்காடு அரசின் பின்நிகழ்வு மானியம் (அதிக பட்சம் தலா ரூ.50,000/-) வழங்கப்படுகிறது. வங்கி […]