• June 7, 2025

சிறு, குறு விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் வங்கி கடன்; ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

 சிறு, குறு விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் வங்கி கடன்; ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

,தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கு அதிக பட்சம் ரூ.1 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள்/தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையான 50 விழுக்காடு அரசின் பின்நிகழ்வு மானியம் (அதிக பட்சம் தலா ரூ.50,000/-) வழங்கப்படுகிறது. வங்கி கடன் பெற்று நீர்ப்பாசன அமைப்பு ஏற்படுத்திய பின்னரே அரசின் மானியம் விடுவிக்கப்படும்.

கடன் பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் வகுப்பினராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்;;.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி விண்ணப்பபடிவம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்ய்பட்ட விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஆதார்; நகல், சிறுகுறு விவசாயி சான்று, பட்டா, சிட்டா ‘ அ” பதிவேடு, அடங்கல் நகல், FMB நில வரைபடம், வில்லங்கச்சான்று , நீர்வள ஆதாரச் சான்று (பொதுப் பணித்துறையில் (WRO) பெறப்பட்டது), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை தவறாது இணைத்தல் வேண்டும். அரசின் மானியத்துடன் கூடிய நீர்ப்பாசனக் கடன் திட்டத்தில் விண்ணப்பித்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

 இவ்வாறு  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *