• June 7, 2025

கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது

 கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது

கோவில்பட்டி போலீஸ்  துணை கண்காணிப்பாளர்  வெங்கடேஷ் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது  அவர் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரண்குமார் (வயது 25) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் கரண்குமாரை கைது செய்தனர்..

கைது செய்யப்பட்ட கரண்குமார் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகளும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 3 வழக்குகளும் என 7 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *