நல்லாசிரியர் விருதுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்டி ஊர்வலம்

கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் குமார், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். இதையொட்டி அவருக்கு நேற்று கோவில்பட்டியில் பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு வந்த தலைமை ஆசிரியர் சுரேஷ் குமாருக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், என்சிசி, என்.எஸ்.எஸ். மாணவர்கள், பழைய மாணவர்கள், திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். மேலும் பேண்டு வாத்தியம் முழங்க, எட்டயபுரம் ரோடு கால்நடை மருத்துவமனை முன்பிருந்து அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பள்ளியில் நடந்த விழாவில் உதவி தலைமை ஆசிரியர்கள் சுதாகரன், சந்திரமதி, கணேஷ்,என்.எஸ்.எஸ்.ஆசிரியர் ஆனந்த பிரபாகரன், என்.சி.சி. ஆசிரியர் பூப்பாண்டி, ஆசிரியர் ராஜசுந்தர் மற்றும் பலர் பாராட்டி பேசினா். முடிவில் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்து சுரேஷ் குமார் பேசினார்.
