கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.விஸ்வகர்ம மகாஜன சங்க துணை தலைவர் சண்முகவேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் தஙகள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சந்திராயன் 4, எரிமலை, காற்றாலை, பசுமை வீடு, 3டி, சோலார், உள்ளிட்ட கண்காசிகள் இடம்பெற செய்திருந்தனர். அவற்றை பார்வையிட்ட அனைவரும் பாராட்டினார்கள்.
. நிகழ்ச்சியில் விஸ்வகர்ம உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாடசாமி, துணைச் செயலாளர் அந்தோணி ராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்து, ஆறுமுகம், சிங்காரவேல், முனியசாமி, விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் செயலாளர் மாரிமுத்து, உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், கலந்து கொண்டனர்.
