எழுத்தறிவு தினம் `லோகோ’ வடிவில் பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு

.
உலக நாடு முழுவதும் செப்டம்பர் 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டிற்கான கருப்பொருள் நிலையான அமைதியான உலகத்தை உருவாக்குதல் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தின் அவசியத்தை எடுத்து கூறும் வகையில் அனைவரும் எழுதப் படிக்க வாருங்கள் என்று கூப்பிடுவதைப்போல் அறிவொளி இயக்க இலச்சினை (லோகோ) வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், ரோட்டரி சங்க பப்ளிக் இமேஜ் தலைவர் முத்து முருகன், பள்ளி தலைமையாசிரியை செல்வி, உடற்கல்வி ஆசிரியர் ஆகாஷ், ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், கணேசன், அருணா, ஜெயலட்சுமி, பிருந்தாதேவி, டாபின் மேரி, ஜோதி, உண்ணாமலைதாய், ஷீபாராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
