காந்தி மைதானம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

.கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சேர்முகன் மனைவி சுப்புலட்சுமி(வயது 42). இவர் தனது பேரனுடன் செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் காந்தி மைதானம் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றார். அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார்.
நகையை பறிகொடுத்த சுப்புலட்சுமி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
