12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்ககோரி தலையில் முக்காடு போட்டு போராட்டம்

இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை விரைவில் கோவில்பட்டி முக்காடு போட்டு போராட்டம்
யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்ட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு தேசிய விவசாயிகள் மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.இளையரசனேந்தல் கிளை தலைவர் பாண்டியன் உட்பட ஏராமானோர் கலந்து கொண்டனர்.
இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களை 2008 ஆம் ஆண்டு கோவில்பட்டி தாலுகா, தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு தற்போது வரை மேற்படி 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியன் உடன் இணைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் மேற்படி பகுதிகளின் அடப்படை வசதிகளான குடி தண்ணீர், ரேஷன் பொருள்கள் ,சுகாதாரம்,நீர் நிலை பராபரிம்பு, ஓடை சுத்தப்படுத்தல், பாதை சீர் அமைத்தல், தெரு விளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகள் பெறமுடியாத நிலை உள்ளது.
அரசின் நலத்திட்டங்கள், மாணவர்கள் உதவி தொகை போன்ற பல்வேறு நல திட்டங்கள் பெற முடியாத நிலை உள்ளது. மத்திய, மாநில அரசின் திட்டங்களில் தென்காசி மாவட்டம் என்று வருவதால் மத்திய அரசின் கிசான் திட்டம் ரூபாய் 6000 பெற முடியாமல் புதிதாக மனு செய்ய முடியாத அளவுக்கு தடுக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் இளையரசனேந்தல் கிராமத்தில் நூறு நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு 6 வாரமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அத்துடன் மேற்படி ஊரில் ரேஷன் கடை ஒழுங்காக திறக்கவும், சரியான பொருள் விநியோகம் செய்யவும், சரியான எடை அளவுகளை கண்காணிக்கவும் வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கோட்டாட்சியரின் உதவியாளரிடம் வழங்கி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
