கோவில்பட்டி பேருந்து நிலையங்கள் இடையே 18 ந் தேதிக்குள் அரசு சரக்குலர் பஸ்; சமாதான கூட்டத்தில் தகவல்

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் கூடுதல் பேருந்து நிலையம் இடையே இயக்கப்பட்டு வந்த அரசு சர்குலர் பஸ் நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மறுபடியும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும் சரக்குலர் பஸ் இயக்க வலியுறுத்தி போராட்டம் வலுத்து வருகிறது.
சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தினர், அதேபோன்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சீனிவாசனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.
இந்நிலையில் இது தொடர்பான சமாதானக் கூட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது .
இந்தக் கூட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் கூடுதல் பேருந்து நிலையம் இடையே இயக்கப்பட்ட அரசு சர்குலர் பஸ் வரும் 18ஆம் தேதிக்குள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டது.
மேலும் அரசு சர்குலர் மினி பஸ் இயக்க மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதை தொடர்ந்து அரசு சர்குலர் பஸ் இயக்கப்படும் வழித்தடங்களும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கூடுதல் பேருந்து நிலையம் தொடங்கி இனாம்மணியாச்சி விலக்கு -அண்ணா பஸ் நிலையம் – மார்க்கெட் – ரெயில் நிலையம் – அரசு மருத்துவமனை – கால்நடை மருத்துவமனை – பசுவந்தனை ரோடு – மங்கள விநாயகர் கோவில் முக்கு -மேட்டு காளியம்மன் கோவில் – மேற்கு பார்க் ரோடு – அண்ணா பேருந்து நிலையம் வரை இயக்கப்படும்.
