காற்றாலை நிறுவனத்தினருடன் மோதல் ; முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தர்ராஜ் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு

ஓட்டப்பிடாரம் அருகே முப்பிலிவெட்டி பகுதியில் காற்றாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரிக்கு செல்லும் பாதையை மறித்து கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு சுந்தர்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தாெடர்பாக காற்றாலை நிறுவனத்தினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் காயம் அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் மற்றும் காற்றாலை நிறுவன ஒப்பந்ததாரர் ஹரி (வயது 35) ஆகிய இருவரும் காயம் அடைந்து ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து காற்றாலை நிறுவன மேலாளர் தர்மபுரியைச் சேர்ந்த பரிமளம் முருகன் (34) என்பவர் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் ராஜ் உட்பட 5பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும், சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் காற்றாலை நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி உட்பட 5பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
