• June 7, 2025

கோவில்பட்டியில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி

 கோவில்பட்டியில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி

    செப்டம்பர் -10 உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இன்று 9-9-2023 கோவில்பட்டி யில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

மாவட்ட மன நல திட்டம் சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை யில் இருந்து எஸ். எஸ். டி. எம். கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை இணை இயக்குனர் (பொ) நலப்பணிகள் மருத்துவர் அகத்தியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

 மருத்துவமனை கண்காணிப்பளர் மருத்துவர்  பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார், நிலைய மருத்துவ அலுவலர் சுதா மாவட்ட மன நல மருத்துவர் ஜோனா, ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர், மன நல உளவியலாளர் சேது அனைவரையும் வரவேற்றார்

          மாணவிகள் அனைவரும் உலக தற்கொலை  தடுப்பு  விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர், மாவட்ட மன நல மருத்துவர் ஜோனா தலைமையில் கருத்தரங்கம் நடை பெற்றது மாணவிகளுக்கு தற்கொலை தடுப்பு  சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்,

பேரணியில் கையில் பதா தைகள் ஏந்தியும், தற்கொலை ஒரு முடிவல்ல,

மனம் திறந்து பேசி விடு, தற்கொலையை தவிர்த்து விடு, வாழ்ந்திடு  நேசித்திடு சாதித்திடு,

தற்கொலை இல்லா உலகத்தை உருவாக்குவோம் என்று கோஷங்கள் எழுப்பியபடி புது ரோடு வழியாக ரெயில் நிலையம் சென்று, திரும்பவும் கோவில் பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பேரணி வந்து சேர்ந்தது.

        நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணியன், கல்லூரி பேராசிரியர்கள் கற்குவேல் ராஜா, ஜெயா, ஸ்ரீ ராம ஜெயா, மருத்துவமனை கணினி தரவு உதவியாளர் செல்வ குமாரி,ஆக்டிவ் மைண்ட்ஸ் மேற்பர்வையாளர்கள் மாடசாமி, செல்வம், உள்பட பலர் கலந்து கொண்டனர், முடிவில் மாவட்ட மன நல திட்ட சமூக பணியாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *