• June 7, 2025

அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கி கூடுதல் கட்டணம் வசூல்; மினி பஸ் பறிமுதல் 

 அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கி கூடுதல் கட்டணம் வசூல்; மினி பஸ் பறிமுதல் 

கோவில்பட்டி நகர் பகுதியில் மினிபஸ்கள் முறைப்படி இயக்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்து இயக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து கோவில்பட்டி சுற்றுப்பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப் பாண்டியன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. 

அப்போது செண்பகவல்லியம்மன் கோவில் முதல் செண்பகப்பேரி வரை இயக்கப்பட வேண்டிய மினிபஸ் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் வரை அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கி கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டுப்பிடிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இரண்டு லோடு வேன், ஒரு ஆட்டோ, மற்றும் ஒரு சரக்கு லாரி ஆகியவை தகுதிச் சான்று இல்லாமலும் சாலை வரி இல்லாமலும் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்பட்டது. 

மேற்படி வாகனங்களுக்கு அபராத தொகை ரூ.73,000 மற்றும் சாலை வரி ரூ.7,100- விதிக்கப்பட்டது.

 மோட்டார் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான அனுமதிச்சீட்டு, சாலை வரி, தகுதிச் சான்று. காப்புச் சான்று மற்றும் புகைச் சான்று ஆகியவை நடப்பில் இருந்தால் மட்டுமே வாகனத்தை பொதுச் சாலையில் இயக்க வேண்டும். மீறி இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *