கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவிளக்கில் வரலட்சுமி அம்மன் முகம் அலங்கரிக்கப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை பிரசாத தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது.. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார். சுற்று வட்டார […]
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு; கனிமொழி எம்.பி.தகவல்
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் ஊராட்சி வடக்கு காலாங்கரையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடை கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- : தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த நிதியில் ரூ.40 லட்சம் கோரம்பள்ளம் பகுதி மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் […]
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறி இருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, “மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.பிரதிநிதிகள் கூட்டம் , தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கீதாஜீவன், அவைத்தலைவர் செல்வராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிள்ளிகுளத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய ரகங்களின் சாகுபடி- விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண்மை கண்காட்சி இன்று நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாய பெருமக்களுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார். மேலும் `இணையில்லா பனை’ என்ற புத்தகத்தினை […]
சாலை விபத்தில் பலி: தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி; முதல்-அமைச்சர்
தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- நான்குநேரி சுங்கசாவடி அருகே நேற்று இரவு நடத்த சாலை விபத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஆரைகுளம் முன்னீர் பள்ளத்தை சேர்ந்த தனியார் தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 […]
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;- தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமம், கோவை ஈஷா யோகா மையமம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்கள் கபடி போட்டியை நடத்த உள்ளது. இந்த போட்டிகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், பின்னர் மாநில அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகள் வருகிற 2, 3-ந் தேதிகளில் தூத்துக்குடி தருவை தமிழ்நாடு விளையாட்டு […]
நிலவில் இறங்கியது சந்திரயான்: கோவில்பட்டியில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்
சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நேற்று நிலவில் இறங்கியது. இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன் அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும். சந்திரயான் 3 வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் மகிழ்ச்சியை கொண்டாட வைத்துள்ளது. கோவில்பட்டி பஸ் நிலையம் எதிரே தேவர் சிலை அருகில் தேசியக் கொடியுடன் பாரத பிரதமர் மோடி புகைப்படத்துடன் பா.ஜனதா கட்சியினர் கூடினார்கள். பொதுமக்களுக்கு இனிப்பு […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அதிகாரி சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 3359 இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு 18.8.2023 முதல் 17.9.2023 வரை இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு […]
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் […]