பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண்மை கண்காட்சி; கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிள்ளிகுளத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய ரகங்களின் சாகுபடி- விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண்மை கண்காட்சி இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாய பெருமக்களுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார். மேலும் `இணையில்லா பனை’ என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ,சார் ஆட்சியர் கவுரவ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.