இரண்டாம் நிலை காவலர் தேர்வு: இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அதிகாரி சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 3359 இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு 18.8.2023 முதல் 17.9.2023 வரை இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.
இத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (25.8.23) பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 30 மணி வரை நடைபெறும்.
பயிற்சி வகுப்புகள் Smart Board பயன்படுத்தி நடத்தப்படும். மேலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms-ஐ fill up செய்து submit செய்யவும்.
