• June 7, 2025

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு

 அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.

ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கியது. இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் இருப்பதால் இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. 

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் ஆஜராகவில்லை. மேலும் அமலாக்கத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் அமலாக்கத் துறையின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *