• June 7, 2025

3345 பேருக்கு தொழிற்கடன்; கனிமொழி எம்.பி.வழங்கினார்

 3345 பேருக்கு தொழிற்கடன்; கனிமொழி எம்.பி.வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைப்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவில்  கனிமொழி எம்.பி.,  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு, 3345 பேருக்கு ரூ.342 கோடி மதிப்பிலான தொழிற் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினர். 

விழாவில், மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ், சார் ஆட்சியர்  கவுரவ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  சுவர்ணலதா சட்டமன்ற உறுப்பினர்  சண்முகையா, மேயர்  ஜெகன் பெரியசாமி, துணை மேயர்  ஜெனிட்டா செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்தமுகாமில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடியில் உள்ள அனைத்து வங்கி கிளைகள் சார்பில் ஸ்டால் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அரங்கிற்கு வருகை தந்த கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோரை வங்கியின் மண்டல மேலாளர் ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *