கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் என் மண் என்னுடையதேசம் நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தலா 75 மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டு வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சிப் பிரான் உறுதிமொழி அடிப்படையிலும், நமது இந்திய சுதந்திர போராட்ட மாவீரர்களின் நினைவாகவும் , மரம் நடும் நிகழ்ச்சியை மத்திய அரசு மற்றும் மாநில அரசுடன் இணைந்து செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் நேரு யுவ கேந்திராவும், […]
ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையிலும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண்’ ‘என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் தொடங்கிய இந்த பயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.கடந்த 6 மற்றும் 7 தேதிகளில் அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 8 ந் தேதி நடை பயணம் […]
மாசிக்காய் மற்ற மரங்களின் காயைப் போல்,பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளை ஒரு வித பூச்சிகள், துளையிடும் போது, கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், அற்புதமான மருந்து. மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். மாசிக்காயை பொடி செய்து, அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால், […]
நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்திய நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதனின் பிறந்த நாள் தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் தேசிய நூலகர் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி அரசு கிளை நூலகத்தில் நூலக உறுப்பினராக 1000 மாணவிகள் இணைத்துக்கொண்டனர். அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. 1000 நூலக உறுப்பினருக்கான கட்டணத் தொகை ரூ.30 ஆயிரத்தை சுவிட்சர்லாந்து சங்கமம் தொண்டு நிறுவனம் நூலகத்துறைக்கு வழங்கியது. அரசு மகளிர் […]
கோவில்பட்டியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம்; 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆட்கள் தேர்வு
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற சனிக்கிழமை 12.8.2023 அன்று கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடத்தும் இந்த வேலை வாய்ப்பு முகாம் அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணி வரை நடக்கிறது. 8,10,12/ஐ.டி.ஐ./டிப்ளமோ/ நர்சிங்/ பி.இ.,பி.எட்., எம்.பி.ஏ. மற்றும் அனைத்து பட்டப்படிப்புகள் படித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்,. முகாமில் தமிழ்நாடு […]
கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி அருகில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் 100 பேர் தங்கி படிக்கும் வசதியுடன் விடுதி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. 885 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில் தரைத்தளத்தில் சமையல் அறை உணவுக்கூடம், காப்பாளர் அறை. மற்றும் கழிவறை உள்ளது. முதல் தளத்தில் மாணவர் தங்கும் அறை மற்றும் கழிவறை , இரண்டாவது தளத்தில் மாணவர் தங்கும் […]
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் நபார்டு வங்கி உதவியுன் ரூ.60.50 ;லட்சம் செலவில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து மருத்துவமனையை சுற்றி பார்த்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் கருணாநிதி, கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர். சஞ்சீவி ராஜ் மற்றும் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர், இனாம் மணியாச்சி இ.பி.காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் கூடுதல் […]
கோவில்பட்டி நகரில் சில பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. இதனால் இரண்டு நாட்கள் மற்றும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர. இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது போல் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள சில பஞ்சாயத்துகளில் குடிநீர் ததட்டுப்பாடு நிலவுகிறது. இதை தொடர்ந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குடிநீர் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் சமூகநலன் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் ஈபி காலனியில் இன்று மாலை 5 மணி அளவில் பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்துக்கு அழைப்பு விடுத்தனர்.மகளிர் அணி துணை தலைவி அமுதாமற்றும் நிர்வாகிகள் 5 மணியளவில் வீடு வீடாக சென்று கோவில்பட்டியில் 11ந் தேதி நடைபயணம் மேற்கொள்ளும் மாநில தலைவர் அண்ணாமலை யுடன் நடைபயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.அண்ணாமலை நடைபயணம […]
தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன குடோனில் ரூ.3.20 லட்சம் முந்திரிபருப்பு கொள்ளை வழக்கில் 5
தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்த பால்ராஜ் (வயது 48) என்பவர் முந்திரிபருப்புகளை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவர் திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலை பகுதியில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அதில் முந்திரிபருப்பு மூட்டைகளை இருப்பு வைப்பது வழக்கம். கடந்த 7ம் தேதி இரவு இந்த குடோனுக்கு வந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி குடோன் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர், பின்னர் […]