கோவில்பட்டியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம்; 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆட்கள் தேர்வு செய்கின்றன

முகாம் நடைபெறும் நாடார் மேல்நிலைப்ப்பளியின் முன்புற தோற்றம்
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற சனிக்கிழமை 12.8.2023 அன்று கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடத்தும் இந்த வேலை வாய்ப்பு முகாம் அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணி வரை நடக்கிறது.
8,10,12/ஐ.டி.ஐ./டிப்ளமோ/ நர்சிங்/ பி.இ.,பி.எட்., எம்.பி.ஏ. மற்றும் அனைத்து பட்டப்படிப்புகள் படித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்,.
முகாமில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. அவர்கள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையானவர்களை தேர்வு செய்கிறார்கள்.
இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்குவந்து பங்கேற்கலாம். மேலும் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் (www.tnprivatejobs.tn.gov.in) வேலைநாடுநர்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களது விபரங்களை பதிவுசெய்ய வேண்டும். வேலைவாய்ப்புமுகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Thoothukudi Employment office என்ற Telegram channel-ல் இணையவும். உங்கள் அலைபேசியில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்பு Thoothukudi Employment office என search செய்தால்channel தோன்றும். அதன் உள்நுழைந்து Join என்பதனை click செய்துஎளிதில் channel-ல்இணையலாம்
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இருக்கின்ற தனியார் நிறுவன(employer) பிரதிநிதிகளுக்கு இன்று(10.8.2023) வியாழக்கிழமை மாலை 4. மணிக்கு ஆன்லைன் வாயிலாக zoom meeting நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலை வாய்ப்பு முகாமை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சையது முகமது, உதவி இயக்குனர் பேச்சியம்மாள் ஆகியோர் முகாம் நடைமுறைகள் பற்றி எடுத்து கூறினார்கள்.
முகாம் நடைபெறும் பள்ளியில் சனிக்கிழமை காலை எட்டு மணி முதல் நிறுவனங்களின் பதிவு தொடங்கும். நுழைவு பகுதியில் மெகா பேனர் வைக்கபட்டு இருக்கும். அதில் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயர் மற்றும் ஹால் நம்பர் இடம் பெற்று இருக்கும்.
ஒரு வகுப்பறையில் நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கபட்டு இருக்கும். அங்கு ஒவ்வொருவரும் சென்று நேர்முக தேர்வை நடத்திகொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது.
வேலைவாய்ப்பில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து முகாம் நடைபெறும் நாடார் மேல்நிலைப்பள்ளிக்கு தலா இரண்டு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சையது அகமது தெரிவித்தார்.
முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மற்றும் மீன்வளம்–மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் சிறப்புரையாற்ற உள்ளார்.
