கோவில்பட்டியில் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி கட்டிடம் திறப்பு

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி அருகில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் 100 பேர் தங்கி படிக்கும் வசதியுடன் விடுதி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
885 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
ரூ.2 கோடியே 7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில் தரைத்தளத்தில் சமையல் அறை உணவுக்கூடம், காப்பாளர் அறை. மற்றும் கழிவறை உள்ளது. முதல் தளத்தில் மாணவர் தங்கும் அறை மற்றும் கழிவறை , இரண்டாவது தளத்தில் மாணவர் தங்கும் அறை, கழிவறை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மாணவர் விடுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகராட்சி சேர்மன் கருணாநிதி குத்துவிளக்கு ஏற்றி புதிய மாணவர் விடுதியை திறந்து வைத்தார்.
பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நல அலுவலர் விக்னேஸ்வரன், உதவி பொறியாளர் கங்கா பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சந்திரசேகர் , அரசு கலைக்கல்லூரி முதல்வர் நிர்மலா, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
