• June 8, 2025

அண்ணாமலை நடைபயணம்: வீடு வீடாக சென்று பா. ஜனதா நிர்வாகிகள் அழைப்பு

 அண்ணாமலை நடைபயணம்: வீடு வீடாக சென்று பா. ஜனதா நிர்வாகிகள் அழைப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் ஈபி காலனியில் இன்று மாலை 5 மணி அளவில் பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
மகளிர் அணி துணை தலைவி அமுதாமற்றும் நிர்வாகிகள் 5 மணியளவில் வீடு வீடாக சென்று கோவில்பட்டியில் 11ந் தேதி நடைபயணம் மேற்கொள்ளும் மாநில தலைவர் அண்ணாமலை யுடன் நடைபயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
அண்ணாமலை நடைபயணம குறித்து விளக்க நோட்டீஸ் உடன் பிரச்சார வாகன வடிவமைக்கப்பட்டு வீதி வீதியாக சுற்றுப்பயணம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் காளிராஜ் மாவட்ட செயலாளர் ராஜகாந்தன் மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன் கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் வசந்தராஜ் மகளிர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தில்லை மற்றும் முத்து முன்னாள் கிளைத் தலைவர் அழகு மீனாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் சுமார்200க்கும் மேற்பட்ட வீடுகளில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *